நெடுஞ்சாலை 407 இன் பயன்பாடு இந்த வாரம் முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் இந்த நெடுஞ்சாலையைப் பயன்படுத்தும் வாகனச்சாரதிகள் அதிக கட்டணம் செலுத்தவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக புதிய கட்டண முறைகள் நடைமுறைக்கு வரும் நிலையில் நெடுஞ்சாலை கட்டணம் 14 சதவீதம் வரை உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் அதிக நேரங்களில் நெடுஞ்சாலையைப் பயன்படுத்தும் சாரதிகள் ஒரு கிலோமீட்டருக்கு 9 முதல் 14 சதவீதம் வரை அதிகரிக்கும் நெடுஞ்சாலைக் கட்டணத்தைச் செலுத்த நேரிடும்.
அதன் பிரகாரம் பிற்பகல் 3:30 மணி – 6 மணிவரை 50.6 சென்ற் வரையும், மேலதிக கிலோ மீட்டருக்கு 57.6 சென்ற் அறவிடப்படும்.
இதுவே காலையில் 13.2 சதவிகிதம் உயர்வடையும் என்றும், அக்கட்டணம் 46.2 சென்ற் இருந்து 52.3 சென்ற் வரை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.