முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

பெரும்பான்மையின மக்களைத் திருப்திபடுத்த செய்த ஒரு விடயமே ஜனாஸாக்கள்…

261

முஸ்லிம் மக்களின் ஜனாஸாக்கள் தொடர்பில் சிறிலங்காஅரசு பெரும்பான்மையின மக்களைத் திருப்திபடுத்த செய்த ஒரு விடயமே தவிர விஞ்ஞான ரீதியான பிரச்சனை இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இரணைதீவில் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களையும், பங்குத்தந்தையர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது, தமிழ் மக்கள் எவ்வளவு தான் நசுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டாலும் தொடர்ச்சியாக தங்களது உரிமைகளுக்காக எழுந்து நிற்பார்கள் என்பதற்கு இந்த இரணைதீவு மக்களுடைய பிரயத்தனமும் வெற்றியும் சான்றாக அமைகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இரணைதீவு பகுதியில் குடியேறிய மக்களுக்கு வாழ்வதற்குரிய அடிப்படை வசதிகள் கூட இல்லை வசதிகளை பெற்றுத் தருவதற்கு தொடர்ந்தும் பல முயற்சிகளை நாங்கள் பல வழிகளிலும் முன்னெடுத்து வருகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கொரோனா தொற்று உறுதியானவர்களை அடக்கம் செய்ய இரணைதீவு பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டமையானது தமிழர்களையும் முஸ்லீம்களையும் பிரிக்கும் சூழ்ச்சியின் விளைவு என நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சாடியுள்ளார்.

ஜெனீவா பிரேரணையை செயலிழக்க செய்வதற்காகவே அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் இந்த பிரித்தாளும் சூழ்ச்சியை தமிழர்களும் முஸ்லீம்களும் நிதானமாக கையாள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *