பைசர் கொரோனா தடுப்பூசி தொடர்பில் புதிப்பிக்கப்பட்ட அறிவிப்புக்களை கனடிய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட அறிவிப்பில் பைசர் தடுப்பூசியின் ஒரு குப்பியில் உள்ள மருந்தளவை ஒருதடவை பயன்படுத்துவது பற்றிய அறிவிப்பே வெளியிடப்பட்டிருந்தது.எனினும் தற்போது ஒரு மருந்துக்குப்பியில் உள்ள மருந்தளவை ஆறு தடவைகள் பயன்படுத்துவதற்குரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இதனை வகுத்தெடுப்பது தொடர்பாக புதிய அறிவிப்புக்களும் வெளியிடப்படவுள்ளது. இதேவேளை, கொரோனா தடுப்பூசியின் இராண்டாவது கட்டம் இம்மாத இறுதிக்குள் கனடாவை வந்தடையும் என்று பைசர் நிறுவனம் பிரதமர் ரூடோவிற்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.