அடுத்த மாத இறுதியில் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று அவரது அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தார்.
அப்போது பிரித்தானியாவில் கொரோனாவின் 2வது அலை ஏற்பட்டதால் அவரது பயணம் பிற்போடப்பட்டிருந்தது.
இந்தநிலையில், அவர் ஏப்ரல் மாத இறுதியில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை பிரித்தானிய அரசு மேற்கொண்டு வருவதாக பிரதமர் அலுவலகம் இன்று அறிவித்துள்ளது.