முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

மக்களின் ஆணையை அரசியல்வாதிகள் மறப்பதன் காரணத்தினாலேயே, இலஞ்சம்- ஊழல், வெள்ளைவான் கலாசாரம் நாட்டில்..

435

மக்களின் ஆணையை அரசியல்வாதிகள் மறப்பதன் காரணத்தினாலேயே, இலஞ்சம்- ஊழல், வெள்ளைவான் கலாசாரம் நாட்டில் ஏற்பட்டுள்ளதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

30 வருடங்களுக்கு முன்னர் நான் அருட்தந்தையாக இருந்தபோது, எமது பிரதேசத்தில் இருந்த ஒரு அரசியல்வாதி, பிரதியமைச்சராக இருந்தார்.

எனினும், அவர் அப்போது நடைபெற்ற தேர்தலில் போட்டியிடவில்லை. இந்த நிலையில், ஒரு நிகழ்வொன்றில் நான் அவரை சந்தித்தபோது, ஏன் தேர்தலில் போட்டியிடவில்லை என்று வினவினேன்.

அதற்கு அவர், பணம் சம்பாதித்தது போதும் என்றும் இதனால் தான் தேர்தலில் களமிறங்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

அந்த அரசியல்வாதி அவ்வாறானதொரு கருத்தை வெளியிடுவார் என்று நான் அன்று நினைக்கவில்லை. மக்களுக்கு சேவையாற்றுவதே அரசியலில் பிரதான நோக்கமாகும்.

ஆனால், அதிகாரத்திற்கு வந்தவுடன் இந்த செயற்பாட்டை அரசியல்வாதிகள் மறந்து விடுகிறார்கள். இந்த கலாசாரத்தை இலகுவாக மாற்றியமைக்க முடியாது. அரசியலமைப்பின் ஊடாகத்தான் இதில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

இங்குள்ள மக்கள் எவரும் முட்டாள்கள் அல்ல. அனைத்து விடயங்களையும் அவர்கள் அவதானித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை அரசியல்வாதிகள் புரிந்துக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *