முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் நலம் பெற வேண்டும் என்று தமிழக மக்களோடு நானும் பிரார்த்தனை செய்கிறேன்.
ஜெயலலிதா தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும், ECMO போன்ற உயிர் காக்கும் கருவிகள் துணையோடு, தீவிர சிகிச்சை நடைபெறுகிறது என்று தொலைக்காட்சியிலும் பத்திரிக்கையிலும் செய்திகள் வருவதை பார்க்கும்போது உண்மையில் மனம் வேதனையடைகிறது எனத் குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா மீண்டும் சகஜ நிலைக்கு வர வேண்டும், மக்கள் பணியை தொடர்ந்து அவர் மேற்கொள்ள வேண்டும் என்றும், அதற்காக மக்களோடு மக்களாக தானும் அவரது உடல்நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.