முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

மக்கள் திரண்டு வந்து வாக்களிக்க வேண்டும்

223

தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் இன்று ஒரே கட்டமாக தேர்தல் தேர்தல் நடைபெறுகின்ற நிலையில் மக்கள் திரண்டுவந்து வாக்களிக்க வேண்டுமென பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, அசாம் மாநிலத்தில் மூன்றாவது மற்றும் இறுதிக்கட்டத் தேர்தலும் மேற்கு வங்காளத்தில் மூன்றாம் கட்டத் தேர்தலிலும் மக்கள் இன்று வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில், இது தொடர்பாக தனது கீச்சகத்தில் தமிழ் உட்பட ஐந்து மொழிகளிலும் பதிவிட்டுள்ளார். மக்கள் அதிகளவில் வாக்குகளைச் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பாக, இளம் வாக்காளர்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “தமிழ்நாட்டில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. மக்கள் அதிகளவில் வாக்களித்து ஜனநாயகத் திருவிழாவை வலுப்படுத்த வேண்டும் என்று தமிழக மக்களை நான் கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *