மனிடோபாவிற்குள் பிரவேசிக்கும் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னரே பொதுவெளியில் நடமாடுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படுவார்கள்.
14 நாட்கள் தனிமைப்படுத்தலினை தவிர்த்து பொதுவெளியில் நடமாடுபவர்கள் மீது சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் பிரையன் பொலிஸ்டர் (Brian Palliste) இந்த அறிவிப்பினை விடுத்துள்ளதோடு இத்தீர்மானமானது எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் அமுலில் இருக்கவுள்ளதாவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மாகாணத்தின் ஆபத்தான நிலைமைகளை தவிர்ப்பதற்காகவே இந்த தீர்மானத்தினை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.