முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா வெளியேறியது பாதகம் என்ற போதிலும், மாற்று வழியை ஆராய்வுள்ளதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார்

867

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா வெளியேறியிருப்பது, தமிழர் தரப்புக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வெளியேற்றம் எமக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது எனவும், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்காவிடினும், விடயங்களை எவ்வாறு கையாளுவது என்பது தொடர்பாக அமெரிக்காவுடன் தாங்கள் பேச்சு நடத்தி, வெளியில் இருந்து எப்படி விடயங்களைக் கையாளலாம் என்று ஆராயவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவுடன் இணைந்து தீர்மானங்களைக் கொண்டு வந்த பிரித்தானியா, மொன்ரனிக்ரோ, மசிடோனியா ஆகிய நாடுகள் தொடர்ந்தும் பேரவையில் இருக்கின்ற நிலையில், அந்த நாடுகளுடனும் பேச்சு நடாத்தவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா தலைமை தாங்கி நிறைவேற்றிய தீர்மானத்துக்கு எந்தப் பாதிப்பும் வராது எனவும், அந்தத் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுவதைக் கண்காணிக்க வேண்டியது ஐ.நா. மனித உரிமைகள் பேரவையும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரும் தான் எனவும் அவர் விபரித்துள்ளார்.

அழுத்தம் கொடுப்பது மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலேயே அமெரிக்காவின் தேவை இருக்கின்றது எனவும், அமெரிக்கா வெளியேறினாலும், உறுதியாக தலைமைத்துவம் வழங்கக் கூடிய ஏனைய தரப்புக்களுடன் தாங்கள் பேச்சு நடத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இந்தப் பேச்சுக்கள் இடம்பெறும் எனவும், மாற்று வழிகளாக இதனை ஆராய்வதாகவும் சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *