முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

மன்னாரில் மனித எலும்புக்கூடுகள் மீட்பு பணிகள் 44 ஆவது நாளாகவும் தொடர்கின்றன

658

மன்னார் ‘சதொச’விற்பனை நிலைய வளாகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை 44ஆவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மன்னார் நீதவான் பிரபாகரன் மேற்பார்வையில் இடம்பெறும் குறித்த நடவடிக்கையில், சிறப்பு சட்ட வைத்திய அதிகாரி ராஜபக்ஸ தலைமையில் களனி பல்கலைக்கழக பேராசிரியர் ராஜசோம தேவாவின் குழுவினரும் இணைந்து அகழ்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த அகழ்வுப் பணிகளின் போது, தற்போது வரைக்கும் 60 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதோடு, அடையாளம் காணப்பட்டுள்ள மனித எலும்புக்கூடுகளை மீட்கும் பணி இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *