மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு இன்று இரவு 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை- தேர்தல் பிரசாரம் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து வருகிறது.
முதல் 4 கட்டத் தேர்தல்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில் இன்னும், 4 கட்டத் தேர்தல்கள் நடைபெற வேண்டியுள்ளது.
இந்த நிலையில் பிரசாரத்தின்போது மம்தா அவதுாறாக பேசியதாக பா.ஜ.க., அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் தேர்தல் ஆணையம், மம்தா பானர்ஜிக்கு 24 மணி நேர பிரசாரத் தடை விதித்துள்ளது.