மருதனார்மடம் கொரோனா கொத்தணியில் மேலும் ஐவருக்கு வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் இன்று 126 பேருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே ஐவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, வவுனியா நகர்ப்பகுதியில் 55 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வவுனியா சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா- பட்டானிச்சூரில் 7 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், வவுனியா நகர்ப்பகுதியில் திடீர் பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது நகர்ப்பகுதியிலுள்ள வர்த்தகர்கள், அங்கு பணியாற்றுவோர் மற்றும் பட்டானிச்சூர் பகுதியில் இருந்து சட்டவிரோதமாக வெளியேறி வர்த்தக நிலையத்தினை திறந்தவர்கள் என 204 பேருக்கு இவ்வாறு பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் இன்று அவர்களுக்கான முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.