மருத்துவமனையில் இருந்து நேற்றிரவு வீடு திரும்பியுள்ள, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தாம் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை இரவு இரா.சம்பந்தன் உடல் உபாதைகள் காரணமாகக் கொழும்பு தனியார் மருத்துவமனையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அங்கு பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளை தொடர்ந்து, வெள்ளிக்கிழமை இரவு, சாதாரண விடுதிக்கு மாற்றப்பட்டிருந்தார்.
இந்தநிலையில், நேற்று மாலை 6.30 மணியளவில் இரா.சம்பந்தன், கொழும்பிலுள்ள வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.