மாகாண சபைகளுக்கான தேர்தலை எதிர்வரும் ஜூன் மாதம் நடத்துவதற்கு சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச திட்டமிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஆளும்கட்சியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களை எதிர்வரும் புதன்கிழமை சந்திக்கவுள்ள சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இதன்போது, நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு மாகாணசபைத் தேர்தலுக்கு தயாராகுமாறு கோரவுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், தற்போதைய நிலையில் மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் ஏன் அவசரப்படுகிறது என்பதற்கு உடனடியாக காரணங்கள் ஏதும் வெளியாகவில்லை. எனினும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரையில், விரைவில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.