மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் இருந்து பிள்ளையான் உள்ளிட்ட 5 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
2005 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மரியன்னை தேவாலயத்தில் நத்தார் நள்ளிரவு ஆராதனையின் போது,நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்தப் படுகொலையின் சூத்திரதாரிகள் என, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட 5 பேர், கடந்த 2015 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இவர்களுக்கு எதிராக, மட்டக்களப்பு மேல்நீதிமன்றத்தில் சட்டமா அதிபரினால் படுகொலை வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்த்து.
இந்த வழக்கில் பெற்றப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை மேல்நீதிமன்றம் நிராகரித்த நிலையில், வழக்கில் இருந்து விலகிக் கொள்வதாக சட்டமா அதிபர் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று மட்டக்களப்பு மேல் நீதிமன்றம், பிள்ளையான் உள்ளிட்ட 5 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.