ரொரன்ரோவில், பெண்களுடன் தவறாக நடந்து கொண்டார் மற்றும் பாலியல் தாக்குதலை மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டுகளில், மார்க்கம் (Markham) பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை கனடிய காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Trinity Bellwoods பகுதியில், கடந்த ஜூலை மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் இரண்டு பெண்களுடன் தவறாக நடந்து கொள்ள முயன்றார் என்றும், 2017ஆம் ஆண்டு Foxbar வீதி பகுதியில் பெண் ஒருவர் மீது பாலியல் தாக்குதல் நடத்தினார் என்றும் இவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அஜிதரன் ரவீந்திரா என்ற 30 வயதுடைய குறித்த இளைஞனை கைது செய்துள்ள ரொரன்ரோ காவல்துறையினர் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் கூறியுள்ளனர்.