மார்ச் மாத இறுதிக்குள் 4 மில்லியன் கொரோனா தடுப்பு மருந்துகளை விநியோகிப்பதாக, கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம், பைசர் குளோபல் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி புர்லா (Bourla) உறுதியளித்துள்ளார்.
உரிய தருணத்தில் கனடாவுக்கு, தடுப்பு மருந்து விநியோகிக்கப்படுவது குறித்து பைசர் குளோபல் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியுடன் பேசியதாகவும், இதன்போதே அந்த உறுதிமொழி தரப்பட்டதாகவும், கனேடிய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
கனேடியர்கள் விரைவில் தடுப்பூசியைப் பெறுவதை பெற உறுதிப்படுத்த தொடர்ந்து பணியாற்றுவோம் எனவும், ஜஸ்டின் ட்ரூடோ தனது கீச்சகப் பதிவில் கூறியுள்ளார்.