மிசிசாகாவில் (Mississauga) வீடு ஒன்றில் வெளியாகிய புகையை அடுத்து, அங்கிருந்து சடலம் ஒன்றை மீட்டுள்ளதாக பீல் பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சனிக்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகவும், அவசர அழைப்பை அடுத்து, அவசர சேவை அதிகாரிகள் சென்ற போது, அடுக்குமாடிக் குடியிருப்பின் முதல் தளத்தில் இருந்து புகை வந்து கொண்டிருந்தது என்றும், அவர்கள் கூறியுள்ளனர்.
முதல் தளத்தில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு, நடத்தப்பட்ட தேடுதலின் போது, ஒருவர் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். அவரது வயது மற்றும் பாலின அடையாளம் என்பன வெளியிடப்படவில்லை.
எனினும் அவரது மரணத்துக்கான காரணம் தெரியாத போது குறித்த வீட்டில் தீவிபத்து ஏதும் ஏற்படவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.