ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பசெலெட் அம்மையாரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு சிறிலங்கா வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே கருத்து வெளியிட்டுள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் அரச அதிகாரிகள் மீது ஆதாரமற்ற- தவறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அவர்களிடம் ஏதேனும் ஆதாரங்கள் இருந்தால் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்றும் அட்மிரல் கொலம்பகே கூறியுள்ளார்