முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

மியன்மாரில் இராணுவத் தலைவர் உள்ளிட்ட முக்கியத் தளபதிகள் 5பேர் மீது அனைத்துலக விசாரணை நடாத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

590

மியன்மார் நாட்டின் இராணுவத் தலைவரின் மீதும் முக்கியத் தளபதிகள் 5பேரின் மீதும் அனைத்துலக விசாரணைக்கு, ஐக்கிய நாட்டு நிறுவனப் புலனாய்வாளர்கள் அழைப்புவிடுத்துள்ளனர்.

மியன்மாரின் சிறுபான்மை இனத்தவரான ரொஹிஞ்சா முஸ்லிம்களை இனப்படுகொலை புரிந்ததற்காக அவர்கள் மீது வழக்குத் தொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தலைமைத் தளபதி ஜெனரல் மின் ஆங் ஹ்லாய்ங் உள்ளிட்ட மூத்த இராணுவ ஜெனரல்கள் மீது புலனாய்வு நடத்தப்பட அவர்கள் அழைப்பு விடுத்தனர்.

ரக்கைன் மாநிலத்தில் போர்க் குற்றம் புரிந்ததற்காகவும், ரக்கைன், காச்சின், ஷான் மாநிலங்களில் மனித உரிமையை மீறியதற்காகவும் அவர்களின் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *