மியன்மார் இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முதல் நாடு தழுவிய தொழிற்சங்க நடவடிக்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அந்த நாட்டின் முக்கிய தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து விடுத்துள்ள கூட்டு அறிக்கையில் இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நேரம் தற்போது வந்துள்ளது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதேநேரம், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மியன்மார் மக்களினால் தொடர் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது