இராணுவ ஆட்சிக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்களை ஒடுக்க, காவல்துறையினரும், படையினரும் நடத்திய தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை, 235 ஆக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுவரை .ராணுவ ஆட்சிக்கு எதிராக நடந்த போராட்டங்களில் 235 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று மியான்மாரின் மனித உரிமை குழு ஒன்று தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமையும், 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 235 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
சனிக்கிழமையும் போராட்டங்களை ஒடுக்க மியான்மர் படையினர் துப்பாக்கிச் சூடுகளை நடத்தியுள்ளனர். எனினும் உயிரிழப்பு விபரங்கள் வெளியாகவில்லை.