மீண்டும் தூதுவர்களை நியமிப்பது குறித்து இந்தியா – பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையில் ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடந்த புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவும் பாகிஸ்தானும் தமது நாட்டுத் தூதுவர்களை திரும்ப அழைத்துக் கொண்டன.
இந்தநிலையில் கடந்த வாரம் ஜம்மு – காஷ்மீர் எல்லையில் போர்நிறுத்தத்தை கடைப்பிடிக்க இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்புக்கொண்டுள்ளன.
இதனையடுத்தே, இரு நாடுகளும் புதுடெல்லி மற்றும் இஸ்லாமாபாத்தில் உள்ள தங்கள் தூதரகங்களில் மீண்டும் தூதுவர்களை நியமிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.