முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

முல்லைத்தீவினை ஆக்கிரமிக்கவுள்ள பாரிய சிங்கள குடியேற்றத் திட்டம் தொடர்பில் வடமாகாண சபையில விவாதிகக்ப்படவுள்ளது.

1382

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாயபுர என்ற பெயரில் பாரிய சிங்கள குடியேற்றம் ஒன்றுக்கு திட்டமிடப்படுவதாக தெரிவித்துள்ள வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன், இந்த சிங்கள குடியேற்றத்தை தடுத்து நிறுத்துவது தொடர்பாக ஆராய்வதற்காக சிறப்பு அமர்வு ஒன்று சித்திரை 5ம் நாள் நடைபெறவுள்ளது என்று தகவல் வெளியிட்டுள்ளார்.

வடமாகாணசபையின் 119வது அமர்வில் மாயபுர சிங்கள குடியேற்றம் தொடர்பாக சிறப்பு கவனயீர்ப்பு பிரேரணை ஒன்றை சபைக்கு சமர்ப்பித்த மாகாணசபை உறுப்பினர் ரவிகரன், மகாவலி அதிகாரசபை தனது செயற்றிட்ட பகுதியை விரிவாக்குவதன் ஊடாக, மாயபுர என்ற பெயரில் பாரிய சிங்கள குடியேற்றம் ஒன்றுக்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றது. என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் ஊடாக கொக்கிளாய், கொக்குதொடுவாய், கருநாட்டு கேணி மற்றும் நாயாறு பகுதிகளில் உள்ள தமிழ் மக்களின் காணிகளில் சிங்கள மக்களை குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுகின்றது எனவும், இதன் மூலம் சுமார் 7 ஆயிரம் தமிழ் மக்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது எனவும் அவர் விபரித்துள்ளார்.

அத்துடன் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் வாழும் சிங்கள மக்களை வெலி ஓயா என்று அழைக்கப்படும் தனி சிங்கள பிரதேச செயலர் பிரிவுடன் இணைப்பதற்கும் திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றது எனவும், இதனால் பெரும் பாதிப்பு உண்டாகப்போவதாகவும் ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *