முக்கிய செய்திகள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடத்துவதற்கு இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 22 பேருக்கு தடை உத்தரவு

250

மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடத்துவதற்கு இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 22 பேருக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு, வாழைச்சேனை மற்றும் ஏறாவூர் ஆகிய மூன்று நீதிவான் நீதிமன்றங்களும் அந்தந்த பகுதிகளின் பொலிஸ் நிலையங்களின் விண்ணப்பங்களுக்கமைய தடை உத்தரவுகளை பிறப்பித்துள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தம் கருணாகரம், சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், ஶ்ரீநேசன், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இந்திரகுமார் பிரசன்னா, மட்டக்களப்பு மாநகர மேயர் சரவணபவன் உட்பட 22 பேருக்கான தடை உத்தரவுக் கடிதங்களை அவர்களுடைய வீடுகளுக்கு சென்று காவல்துறையினர் கையளித்துள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *