கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள, ஜலாலாபாத் (Jalalabad) நகரில்,தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றும் மூன்று பெண் ஊடகவியலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
பணி முடிந்து தமது வலையமைப்பை விட்டு வெளியேறி வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது, மூவரும் இரண்டு தனித்தனி தாக்குதல்களில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக, எனிகாஸ் (Enikas) தொலைக்காட்சி நிறுவனத்தின் இயக்குநர் கூறியுள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் மற்றொரு பெண் ஊடகவியலாளர் படுகாயமடைந்துள்ளார். அத்துடன், வழிப்போக்கர்கள் இருவரும் காயமடைந்துள்ளனர்.
கொல்லப்பட்ட மூன்று பெண்களும் 18 முதல் 20 வயதுக்குட்பட்ட பட்டதாரிகள் என்றும் எனிகாஸ் (Enikas) தொலைக்காட்சி இயக்குநர் தெரிவித்துள்ளார்.