மேற்குவங்கம், அசாமில் முதற்கட்டமாக, தேர்தல் நடக்கும், 77 தொகுதிகளில் பிரசாரம் முடிவுக்கு வந்துள்ளது.
தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் பல்வேறு கட்டங்களாக நடைபெறவுள்ளன.
முதற்கட்டமாக, அசாமிலும், மேற்கு வங்கத்திலும், நாளை மறுநாள் 77 தொகுதிகளில் வாக்குப்பதிவு இடம்பெறுகிறது.
நாளை மறுநாள் வாக்களிப்பு நடைபெறவுள்ள தொகுதிகளில், இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
அத்துடன், கருத்துகணிப்புகள் இன்று மாலைக்கு பின்னர் வெளியிடவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.