மேலதிகமாக ஏழு தடுப்பூசி விநியோக மையங்கள் திறக்கப்படவுள்ளதாக அல்பேர்ட்டா முதல்வர் ஜேசன் கென்னி தெரிவித்தார்.
இதன்மூலம் மணித்தியாலத்திற்கு ஆயிரம் தடுப்பூசிகளை மாகாணம் முழுவதும் விநியோகிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான தடுப்பூசி விநியோகத்தின் ஊடாகவே கொரோனா பரவலை மூன்றாவது படிநிலைக்கு செல்லாது தடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, ஜுன் மாத இறுதிக்குள் மீளத்திறத்தல் தொடர்பான இராண்டாவது நிலைமையை அடைவதற்கு முயற்சிப்போம் என்றும் அவர் கூறினார்.