வடக்கு மாகாணத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக, வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
“யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவனுக்கும், சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டிருந்த மூவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மானிப்பாய் மருத்துவமனை அதிகாரி ஒருவருக்கும், சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாண நகரில் கடந்த வாரம் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்கள் இருவருக்கும், வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஆடைத் தொழிற்சாலை பணியாளர் ஒருவருக்கும், வவுனியா சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் நான்கு பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.