சிறிலங்காவில் மேலும் 337 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மொத்த கொரோனா பாதிப்பு 55 ஆயிரத்து 526 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, 769 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து இன்று வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் மொத்தமாக 47ஆயிரத்து 984 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
இந்நிலையில், இன்னும் ஏழாயிரத்து 268 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
அத்துடன், கொரோனா தொற்றினால் இதுவரை 274 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை வெள்ளவத்தை சந்தையில் பணியாற்றிய 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை சுகாதார மருந்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.