சிறிலங்காவில் மேலும் 355 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 66 ஆயிரத்து 764ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, 684 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ள நிலையில் மொத்தமாக 60ஆயிரத்து 567 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
இந்நிலையில், இன்னும் ஐயாயிரத்து 685 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
அத்துடன், கொரோனா தொற்றினால் இதுவரை 332 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.