முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

மொடர்னா கொரோனா தடுப்பூசி குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் மீது பரிசோதனை

334

மொடர்னா நிறுவனம் தனது கொரோனா தடுப்பூசியை ஆறு மாதங்கள் முதல் 12 வயது வரையிலான குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு பரிசோதிக்கத் ஆரம்பித்துள்ளது.

அமெரிக்காவில் குழந்தைகளிடையே பரிசோதனையைத் ஆரம்பிப்பதற்காக அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளைக் கொண்ட நிறுவனங்களில் மொடர்னா முதன்மையானதாக உள்ளது.

கிட்கோவ் ஆய்வு என்று அழைக்கப்படும் மருத்துவ பரிசோதனையில், அமெரிக்காவிலும் கனடாவிலும் சுமார் 6ஆயிரத்து 750 குழந்தைகள் உள்வாங்கப்படவுள்ளனர்.

பரிசோதனை இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில் முதல் பகுதியில், தடுப்பூசியின் வெவ்வேறு அளவுகள் குழந்தைகள் மீது சோதிக்கப்படுகின்றன.

இரண்டாவது பகுதியில் 2 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு 50 அல்லது 100 மைக்ரோகிராம் அளவில் சுமார் 28 நாட்கள் இடைவெளியில் தடுப்பூசி போடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *