மொஸாம்பிக்கில் இயற்கை அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புயல் காற்று, மழை வெள்ளம் காரணமாக மொஸாம்பிக்கில் இதுவரையில் 38 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புயல் காற்று காரணமாக மீட்புப் பணியாளர்கள் பாதிக்கப்பட்ட இடங்களைச் சென்றடைய முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக மொஸாம்பிக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கெனத் என்னும் புயல் மணிக்கு 220 கிலோ மீற்றர் கேத்தில் மொஸாம்பிக் உள்ளிட்ட சில ஆபிரிக்க நாடுகளை தாக்கியிருந்தது.
புயல் காற்றின் வீரியம் குறைந்துள்ள போதிலும் மழை மற்றும் பலத்த காற்று தொடர்ச்சியாக வீசி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.