திருகோணமலை- சேருநுவர, சீனன்வெளிப் பகுதியில் மோட்டார் குண்டு வெடித்தில் குடும்பத் தலைவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
81 மில்லி மீற்றர் மோட்டார் குண்டை இயந்திரம் மூலம் அறுத்து வெடிமருந்தை எடுக்க முற்பட்ட போதே, அந்தக் குண்டு வெடித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் சீனன்வெளி பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய அல்லிமுத்து ஜெகன் என்பவரே, உயிரிழந்துள்ளார் என்றும் காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.