முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

ம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களை பார்வையிடுவதற்கு தடை

186

சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களை பார்வையிடுவதற்கு தமிழக அரசினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை, மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் நினைவிடம் அமைந்துள்ள வளாகத்தில், பீனிக்ஸ் பறவை வடிவத்தில் கட்டப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடத்தை கடந்த மாதம் 27-ம் திகதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்திருந்தார்.

அதையடுத்து, ஜெயலிலதா நினைவிடத்தை தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பார்வையிட்டு வந்தனர்.

இந்தநிலையில், எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களை பார்வையிட தமிழக அரசினால் திடீரென தடைவிதிக்கப்பட்டுள்ளது.

சிறையில் இருந்து விடுதலையாகி, பெங்களூருவில் தங்கியுள்ள சசிகலா வரும் 7-ம் திகதி தமிழகம் வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சசிகலா ஜெயலலிதா நினைவிடத்துக்கு செல்வதை தடுக்கும் வகையிலேயே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *