சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் எனக் கோரி, யாழ்ப்பாணத்தில் இன்று 10ஆவது நாளாக சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் இடம்பெற்று வருகிறது.
லண்டனில் நீதி கோரி உணவுதவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அம்பிகை செல்வக்குமாருக்கு ஆதரவு தெரிவித்தும், அவரது கோரிக்கையை வலியுறுத்தியும், யாழ்ப்பாணம்- நல்லூரில் பல்கலைக்கழக மாணவர்கள் உணவுதவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
10 ஆவது நாளை எட்டியுள்ள இந்தப் போராட்டத்தில் அருட்தந்தை சக்திவேல் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள், இன்று பங்கேற்று ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அத்துடன் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.