முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

யாழ்ப்பாணத்தில் நுழைவிசைவுப் பிரிவு மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளது

281

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் நுழைவிசைவுப் பிரிவு மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளது.

யாழ்ப்பாணம் கோவில் வீதியில் இயங்கி வந்த இந்திய நுழைவிசைவு சேவை விண்ணப்ப நிலையம், கொரோனா தொற்று பரவலை அடுத்து, கடந்த மார்ச் 13ஆம் நாள் மூடப்பட்டது.

இந்த நுழைவிசைவு சேவை நிலையம் நேற்று முதல் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு புதன்கிழமையும், காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 1 மணி வரை இந்த நிலையம் இயங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையத்தில் சுற்றுலா தவிர்ந்த ஏனைய அனைத்து வகையான நுழைவிசைவு அனுமதிக்கான விண்ணப்பங்களும் ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் இந்திய துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *