யாழ்ப்பாணத்தில் மேலும் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண நகரப் பகுதி வர்த்தகர்கள் ஆறு பேர், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருவர், யாழ். பல்கலைக்கழக மாணவி, யாழ். நகர புதிய சந்தை பகுதியைச் சேர்ந்த 7 பேர், யாழ் மருத்துவமனையில் தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் 6 பேர், வெளிநோயாளர் பிரிவில் ஒருவர், திருநெல்வேலியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த வவுனியா முகாமைத்துவ பீட மாணவி, உடுவில் பிரதேசத்தில் 2 பேர், சாவகச்சேரி மருத்துவமனைக்கு அறிகுறியுடன் சென்ற ஒருவர் என 27 பேருக்கே நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை, யாழ்.நகரப் பகுதியைச் சேர்ந்த ஆயிரம் வரையான வர்த்தகர்களிடம் பெறப்பட்ட மாதிரிகளின் பிசிஆர் சோதனை முடிவுகள் இன்னமும் கொழும்பில் இருந்து கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.