யேர்மனி நாட்டில் ஓடும் பேருந்து ஒன்றில் இருந்தவர்கள் மீது நபர் ஒருவர் கத்தியால் தாக்கியதில் பலர் காயமடைந்துள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிட்டத்தட்ட 10 பேர் இந்த சம்பவத்தில் காயமடைந்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், 14 பேர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
யேர்மனியின் வடக்கு பகுதியில் உள்ள லூயிபெக் நகரில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் உள்ளூரைச் சேர்ந்த 34 வயதான நபர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
எனினும் அவர் இந்த தாக்குதல் நடத்தியதற்கான காரணம் விளங்கவில்லை என கூறிய காவல்துறையினர் இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.