சென்னையில் பெண் பொறியாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு புழல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ராம்குமார் என்ற இளைஞன், நேற்று சிறையில் தற்கொலை செய்ததாகக் கூறப்படும் நிலையில், அவரின் மரணம் தொடர்பில் பெற்றோர் சந்தேகம் வெளியிட்டுள்னர்.
இது தொடர்பில் மத்திய புலனாய்வுத் துறையினர் தலையிட்டு விசாரணை நடாத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன் தி.மு.க பொருளாளர் ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ராமகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரும் இந்த மரணம் குறித்து நீதிவிசாரணை நடாத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் ராயப்பேட்டை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள ராம்குமாரின் உடலுக்கு இன்று நீதிபதி முன்னிலையில் பிரேதப் பரிசோதனை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்காக அந்தப் பகுதியில் பெரும் எண்ணிக்கையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.