முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

ரூடோ, மோடி தொலைபேசி வாயிலாக கலந்துரையாடல்

298

கனடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோவிற்கும், இந்தியப்பிரதமர் நரேந்திரமோடிக்கும் இடையில் இன்று தொலைபேசி வாயிலான கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலின்போது இந்தியா உற்பத்தி செய்துள்ள கொரோனா தடுப்பூசியில் ஒரு தொகுதியை கனடாவிற்கு வழங்குவதற்கு தயாராக உள்ளதாக நரேந்திரமோடி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பினை அடுத்து கனடிய பிரதமர் ரூடோ அவருக்கு நன்றிகளைத் தெரிவித்துள்ளதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு குறித்தும் கலந்துரையாடியுள்ளார்.

இதேவேளை வெகுவிரைவில் இந்த தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதமர் அலுவலகச் செய்திகள் தெரிவித்துள்ளன.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *