ரொரண்டோவில் பொது இடத்தில் அநாகரீகமான செயலில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரி ஒருவர், பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
விட்பை நகரில் சில நாட்களுக்கு முன்னர் ஒருவர் பொதுவெளியில் வாகனத்தை நிறுத்தி விட்டு அதன் அருகில் இருந்தபடி அநாகரீகமான செயலில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு இளம்பெண் உள்ளிட்ட சிலர் தகவல் வழங்கியிருந்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர் 33 வயதான குறித்த நபரைக் கைது செய்திருந்தனர்.
இதன்பின்னரே அவர் காவல்துறை அதிகாரி என தெரியவந்தது.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி விடுவிக்கப்பட்டுள்ள போதும், அவரை ரொறன்ரோ காவல்துறை பணியில் இருந்து இடைநிறுத்தியுள்ளது.