ரொறன்ரோவின் மேற்குப் பகுதியில் உள்ள பயன்படுத்தப்படாத கட்டடம் ஒன்றில் நேற்று மாலை பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
டன்டாஸ் (Dundas) வீதியின் மேற்குப் பகுதியில் மாலை 6.30 மணியளவில் ஏற்பட்ட இந்த தீவிபத்தை அடுத்து, தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
80 தீயணைப்பு வீரர்கள் பல மணிநே ரம் போராடி, இரவு 10 மணியளவில் தீயை கட்டுப்படுத்தியுள்ளனர்.
தீவிபத்தினால் கட்டடத்தின் ஒரு பகுதி முற்றாக இடிந்து விழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.