கொரோனா முடக்க நிலை மற்றும், பொருளாதார தாக்கங்களுக்கு எதிரான போராட்டம், லெபனானில் தீவிரமடைந்துள்ளது.
லெபனானின் திரிபொலி நகரில், (Tripoli ) மூன்றாவது நாள் இரவு இடம்பெற்ற போராட்டங்களின் போது இடம்பெற்ற வன்முறைகளில், ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்த வன்முறைகளில் மேலும் 220 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
ஆர்ப்பாட்டக் காரர்கள் மீது காவல்துறையினர், துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்று நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
லெபனானில் அதிகரித்துள்ள கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த முழுநேர ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மக்கள் ஆத்திரமடைந்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.