வடகொரியா புதிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை உருவாக்கி வருவதான செய்திகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
வட கொரியாவில் பாலிஸ்டிக் ஏவுகணைகள் தயாரிக்கும் இடம் அதன் செயல்பாட்டினை தொடர்ந்து வருவது, உளவு செயற்கைகோள்கள் மூலம் கண்டறியப்பட்டதாக வோசிங்டன் போஸ்ட் பத்திரிக்கையிடம் பேசிய சில அம்மெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அதனுள் நடைபெற்று வரும் வேலைகள் எதுவரை போயுள்ளன என்பது தெரியாது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக மற்றொரு செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், வட கொரிய தலைவர் கிம் யொங்-உன்னும் கடந்த யூன் மாதம் சிங்கப்பூரில் சந்தித்து கொண்டனர்.
இதன்போது கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பகுதியாக்க இரண்டு நாடுகளும் உறுதி எடுத்துக் கொண்டதுடன், வட கொரியாவால் இனி எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.