முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

வடக்கு, கிழக்கில் தொல்பொருள் அகழ்வுப் பணிகளை இடைநிறுத்தப் போவதில்லை

118

அரசியல்வாதிகளினால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அடிபணிந்து, வடக்கு, கிழக்கில் தொல்பொருள் அகழ்வுப் பணிகளை இடைநிறுத்தப் போவதில்லை என்று, சிறிலங்காவின் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

“வடக்கு கிழக்கு மாகாணங்களில் அண்மைக் காலமாக முன்னெடுக்கப்படும் அகழ்வாராய்ச்சி பணிகள் குறித்து அரசியல்வாதிகள் இனவாத மற்றும் மதவாத அடிப்படையில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்கள்.

அனைத்து இன மக்களின் மரபுரிமைகளும் அனைத்து பகுதிகளிலும் மறைந்துள்ளன. அவற்றை பாதுகாப்பதே தேசிய மரபுரிமைகள் அமைச்சின் நோக்கமாகும்.

அரசியல் நோக்கங்களை கொண்டு தொல்பொருள் அகழ்வாராய்ச்சிக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை அரசியல்வாதிகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

அரசியல்வாதிகளே தேவையில்லாத பிரச்சினையை தோற்றுவித்துள்ளார்கள்.

வடக்கில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வாராய்ச்சிக்கு எதிராக ஒரு தரப்பினர் நீதிமன்றம் செல்வதாக குறிப்பிட்டுள்ளார்கள்.

அனைத்து சவால்களையும் வெற்றி கொள்ள தயாராக உள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *