முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

வடக்கு, கிழக்குக்கு அதிகாரப் பகிர்வு வந்தால் இலங்கையின் நிலைத்தன்மை பாதிக்கப்படும் என்று சம்பிக்க ரணவக்க எச்சரித்துள்ளார்

599

வடக்குக்கும் கிழக்குக்கும் அதிகாரப் பகிர்வு வழங்கப்பட்டால் மாத்திரமே, நாட்டைக் கட்டியெழுப்பலாம் என்று காணப்படும் கருத்தியல் தவறானது எனவும், அவ்வாறு நடந்தால் நாட்டின் நிலைத்தன்மை பாதிக்கப்படும் என்றும் இலங்கை அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அதேபோல் நிறைவேற்று அதிகார சனாதிபதி முறைமையை ஒழித்தால் தான், அபிவிருத்தியைக் கொண்டுவர முடியுமென்பதும், தவறான நோக்கமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் தற்போது சமர்ப்பிக்கப்பட்டள்ள அரசமைப்பின் 20ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டால், நாட்டின் நிலைத்தன்மை பாதிக்கப்படும் எனவும் அவர் இதன்போது எச்சரித்துள்ளார்.

20ஆவது திருத்தம் நாட்டின் நிலைத்தன்மைக்கு வெளிப்படையாகவே பாதிப்பானது எனவும், நிறைவேற்று அதிகார சனாதிபதி முறைமை ஒழிக்கப்பட்டால், வட்டார அடிப்படையிலான, பழைய தேர்தல் முறைமை மீள அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும், நாட்டை நிலையற்றதாக ஆக்குவதற்கு எவ்வித வாய்ப்புகளையும் வழங்கக்கூடாது எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை அரசமைப்பின் 19ஆவது திருத்தம் மூலமாக, சனாதிபதியின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்த அவர், இதற்குப் பின்னும் பறிப்பதற்கான அதிகாரங்கள் காணப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *