முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

வடமாகாண முதலமைச்சர் ஜரோப்பிய நாடுகளிற்கான பயணம் மேற்கொள்ளவுள்ளார்

1308

புலம்பெயர் உறவுகளது அழைப்பின் பேரில் வடமாகாண முதலமைச்சர் ஜரோப்பிய நாடுகளிற்கான பயணம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த மாதத்தின் இறுதிப் பகுதியில் அல்லது அடுத்த மாத முற்பகுதியில் ஐரோப்பிய நாடுகளுக்கான முதல்வரின் பயணம் ஆரம்பமாகும் என்று தெரியவருகிறது.

வடமாகாணசபையில் ஆளுநர் நிதியத்திற்கு அனுமதி வழங்கியுள்ள அரசாங்கம், மறுபுறம் முதலமைச்சர் நிதியத்திற்கான அனுமதியை வழங்க பின்னடித்தே வருவதுடன், கூட்டமைப்பின் கீழான வடமாகாணசபை ஆட்சி பீடமேறி மூன்று ஆண்டுகளைத் தாண்டியுள்ள போதிலும், முதலமைச்சர் நிதியத்திற்கான அனுமதி இதுவரை நல்லாட்சி எனப்படும் புதிய அரசிலும் வழங்கப்படாத நிலைமை நீடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

எனினும் முதலமைச்சர் நிதியத்திற்கான அனுமதி விரைவில் வழங்கப்படாலாமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையிலேயே, முதலமைச்சரது மேற்கு நாடுகளிற்கான பயணம் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது.

முதலமைச்சர் நிதியத்திற்கான நிதி திரட்டலிற்காகவே இந்தப் பயணம் இடம்பெறுவதாக கூறப்படுகின்ற போதிலும், முதலமைச்சர் அலுவலகம் இதனை உறுதிப்படுத்தவில்லை.

எனினும் பிரித்தானியாவில் உள்ள தமிழ் அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்துள்ள நிகழ்வுக்கே முதலமைச்சர் விக்னேஸ்வரன் பிரித்தானியா செல்லவிருக்கிறார் என்று நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *