முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

வட மாகாண சபைக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

1200

வட மாகாண சபைக்கு எதிராக ஜாதிக ஹெல உறுமய இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றைப் பதிவுசெய்துள்ளது.

இந்த முறைப்பாட்டை செய்துள்ள ஜாதிக ஹெல உறுமய கட்சியின் மேல் மகாண சபை உறுப்பினர் நிஸாந்த வர்ணகுலசூரிய ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில், வடக்கில் பௌத்த விகாரைகளை அபிவிருத்தி செய்வதற்கு வட மாகாண சபையால் நிதி வழங்கப்பட மாட்டாது என்று வட மாகாண சபையால் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பௌத்த மதத்திற்கு முன்னுரிமையளித்து, அதைப் பாதுகாக்க வேண்டும் என அரசியல் அமைப்பின் 9 ஆவது அத்தியாத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், இந்த நிலையில் இவ்வாறானதொரு தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டமை நாட்டின் அரசியமைப்புக்கு எதிரானது என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

அத்துடன் அது அடிப்படை மத சுதந்திரத்தையும் மீறும் செயல் என்றும், அதனால் வட மாகாண சபையின் செயற்பாடுகளுக்கு எதிராக ஜாதிக ஹெல உறுமய சட்ட நடவடிக்கை எடுக்கும் என்றும் நிஸாந்த வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *