வவுனியா- வைரவ புளியங்குளம் பகுதியில் இனந்தெரியாத நபர்கள் வீட்டுக்குள் புகுந்து நடத்திய தாக்குதலில் மருத்துவர்களான கணவனும், மனைவியும் காயமடைந்துள்ளனர்.
வைரவபுளியங்குளம், 6 ஆம் ஓழுங்கையில் உள்ள வீட்டிற்குள் இன்று அதிகாலை 12.30 மணியளவில் புகுந்த நான்கு பேர் கொண்ட குழுவினரே, உறங்கிக் கொண்டிருந்த மருத்துவ தம்பதியினரை கம்பியினால் தாக்கி படுகாயப்படுத்தியுள்ளனர்.
வீட்டில் இருந்த தொலைக்காட்சி, கண்காணிப்பு கருவி உள்ளிட்ட பொருட்களையும் சேதப்படுத்தியுள்ள இந்தக் குழுவினர் பெறுமதி வாய்ந்த இலத்திரனியல் பொருட்களையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த மருத்துவர்களான கணவனும் மனைவியும் வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.